கர்த்தாவே நான் உமக்கு

 

 

கர்த்தாவே நான் உமக்கு புதுப்பாடல் பாடுவேன்

தம்புரு வீணை மீட்டி உம்புகழ் பாடுவேன் (2)

 

     நன்றியோடு உம்மைத் துதிப்பேன்

     அல்லேலூயாப் பாடி உமைப் போற்றுவேன்

 

கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் நாங்கள்

பாக்கியவான்களே -  (2)

அவரே நமக்கு சுதந்திரமானார்

நற்சீரைப் பெற்றிட்டோமே (2)  

 

கர்த்தரை நாம் தொழும் வேளையி;ல் எல்லாம்

சமீபம் ஆனாரே (2)

இத்தனை பெரிய சிலாக்கியம் அடைந்தோர்

இப்பூவில் இல்லையே  (2)   

 

அப்பா பிதாவே என்று அழைக்கும் பாக்கியத்தை

நமக்கவர் ஈந்தாரே (2)

புத்திரசுவிகார ஆவியைப் பெற்று நாம்

பிள்ளைகள் ஆனோமே   (2)